உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூச்சிமருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

பூச்சிமருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பூச்சி மருந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், 46; கூலித் தொழிலாளி. இவர், சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் இறந்தார். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி