உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கால்நடை வளர்ப்பு குறித்துதொலைபேசி உரையாடல்

கால்நடை வளர்ப்பு குறித்துதொலைபேசி உரையாடல்

சிதம்பரம்:கால்நடை வளர்ப்பு பற்றி தொலைபேசி வழி உரையாடல் நிகழ்ச்சியை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் நாளை (9ம் தேதி) ஏற்பாடு செய்துள்ளது.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கால்நடை வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து சந்தேகங்களை தொலைபேசி மூலம் நிபுணர்களுடன் தெரிந்து கொள்வதற்காக தொலைபேசி வழி உரையாடல் நிகழ்ச்சியை நாளை (9ம் தேதி) ஏற்பாடு செய்துள்ளது.கால்நடை சம்பந்தமான சந்தேகங்களை 93800 01217 என்ற மொபைல் போனில் அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். மதியம் 2 மணி முதல் மாலை 5 வரை கால்நடைத்துறை நிபுணர்கள் தங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சங்தேகங்களுக்கான பதில் தெரிவிப்பார்கள்.இதனை சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட அலுவலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை