| ADDED : ஜன 19, 2024 11:17 PM
அவலுார்பேட்டை- வளத்தி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.வளத்தி அடுத்த பென்ன கர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 52; விவசாயி. குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்ததால், கடந்த 3 ஆண்டுகளாக அவரது மனைவி கீதா சென்னையில் வசித்து வருகிறார்.இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சண்முகம் நேற்று முன்தினம் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் இறந்தார்.புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.