உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

விழுப்புரம்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தனியார் பள்ளி முதல்வர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்,41; ரெட்டணையில் உள்ள தனியார் பள்ளி முதல்வரான இவர், அப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை, தனது அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஓருவர் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்ட பிரிவில் வழக்கு பதிந்து, கார்த்திகேயனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை, விழுப்புரம் 'போக்சோ' சிறப்பு நீதிபதி ஹெர்மிஸ் முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி