மேலும் செய்திகள்
ரூ. 5 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்
06-Sep-2025
வளவனுார் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு, இரவு நேரங்களில் போலீசார் தனியாக ரோந்து பணி சென்றபோது, குடிமகன்கள் பலர் கூட்டாக சேர்ந்து போலீசாரிடம் ரகளையில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதனால், நைட் ரோந்துக்கு, இரு போலீசார் செல்ல வேண்டும் என முடிவு செய்து, கடந்த சில மாதங்களாக ஆயுதப்படை போலீசார் சிலர் வளவனுார் போலீசாருடன் ரோந்து சென்றனர். ரோந்து சென்ற ஆயுதப்படை போலீசார், கடந்த ஜூலை மாதத்துடன் மீண்டும் ஆயுதப்படை பணிக்கு அழைத்து கொண்டனர். இதனால் வளவனுார் போலீசார் இரவு நேர ரோந்து செல்வதை முழுவதுமாக நிறுத்தி விட்டனர். இதை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், வளவனுார் பகுதிகளில் உள்ள சின்ன குச்சிப்பாளையம், சிறுவந்தாடு உட்பட பல்வேறு கிராமங்களில் வீடுகளின் பூட்டை உடைத்தும், வீட்டில் உறங்கி கொண்டிருந்தோரை மிரட்டி நகைகளை பறித்து சென்றுள்ளனர். கடந்த 45 நாட்களில் வளவனுார் போலீசாரின் எல்லை பகுதிகளில் 150 சவரன் நகை திருடு போயுள்ளது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதுடன், போதிய போலீசார் இன்றி இரவு நேர ரோந்து செல்ல முடியாமல் உள்ளனர். தங்கம் விற்கும் விலை ஏற்றத்தை சாதகமாக்கி, மர்ம நபர்கள் கிராமங்களை குறி வைத்து திருடி வரும் சூழலில், வளவனுார் போலீசார் மர்ம நபர்களை கண்டுபிடித்து நகைகளை பறிமுதல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
06-Sep-2025