மேலும் செய்திகள்
28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
1 minutes ago
செல்லப்பிராணிக்கு கல்லறை செஞ்சி வரலாற்றில் ஓர் அங்கம்
3 minutes ago
எஸ்.ஐ.ஆர்., பணி தி.மு.க.வினர் ஆய்வு
6 minutes ago
பா .ம.க.,வில் நடந்த உச்சகட்ட மோதலுக்கு பிறகு, அன்புமணியை கட்சியை விட்டு நீக்கிய நிறுவனர் ராமதாஸ், அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவியை அன்புமணியின் சகோதரி ஸ்ரீ காந்தி பரசுராமனுக்கு கொடுத்தார். இதே போல் ராமதாசின் அரசியல் வாரிசாக உருவெடுக்கும் வகையில், ஸ்ரீ காந்தியின் மூன்றாவது மகன் முகுந்தனுக்கு, அன்புமணி ஏற்கனவே வகித்த வந்த மாநில இளைஞர் சங்க பதவியை, கட்சி செயற்குழு கூட்டத்தில் முறைப்படி அறிவித்தார். இதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நியமனம் கட்சிக்குள், ராமதாசிற்கும் - அன்புமணிக்கும் மோதலை உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்டது. கட்சிக்குள் பிரச்னை நாளுக்கு நாள் வலுத்து வந்ததால், முகுந்தன் அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு அந்த பதவி ராமதாஸ், ஜி.கே.மணியன் மகன் தமிழக்குமரனுக்கு வழங்கினார். தனக்கு வயதாகிவிட்டதால், தன்னுடைய மகள் வழி பேரனை அரசியலுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் முகுந்தனை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிருத்தினார். கடைசியில் முகுந்தன் கட்சி பதவி வேண்டாம் என ஒதுங்கிகொண்டார். இந்த சூழ்நிலையில், ராமதாஸ் மீண்டும் மகள் ஸ்ரீ காந்தியின் மூத்த மகனான டாக்டர் சுகந்தன் பரசுராமனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அவருக்கு பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கினார். இதன் மூலம், சுகந்தனை அரசியல் வாரிசாக ராமதாஸ் அறிமுகப்படுத்தியுள்ளதாக, கட்சி வட்டாரத்தில் பேசுகின்றனர். சுகந்தனின் உடன் பிறந்த சகோதரர் பிரீத்திவி, அன்புமணியின் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் வரும் டிச. 12ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பா.ம.க., சார்பில் போராட்டம் நடத்துவதற்கு ராமதாஸ் ஆயுத்தமாகி வருகிறார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக டாக்டர் சுகந்தனை கட்சி நிறுவனர் ராமதாஸ் நியமித்துள்ளார். இதன் மூலம் சுகந்தன் வருங்காலத்தில் பா.ம.க.,வின் அரசியல் வாரிசாக உருவெடுக்கும் நிலை வந்துள்ளது என்று பா.ம.க., நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
1 minutes ago
3 minutes ago
6 minutes ago