உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  டிப்பர் லாரி உரசியதில் மின் கம்பி அறுந்து விழுந்து இளம்பெண் காயம்

 டிப்பர் லாரி உரசியதில் மின் கம்பி அறுந்து விழுந்து இளம்பெண் காயம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டம் கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 33; டிப்பர் லாரி டிரைவர். கடந்த 20ம் தேதி விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணை செல்வராஜ் வீடு அருகே எம் சாண்ட் கொட்டினார். டிப்பரை உயர்த்தியபோது, மின்சார கம்பி மீது உரசி கம்பி அறுந்து அருகில் நின்றிருந்த அஸ்வினி, 23; என்பவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அஸ்வினி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கஞ்சனுார் போலிசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் பிரகாசை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை