உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி

அருப்புக்கோட்டை, : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அருப்புக்கோட்டை அருகே செட்டிபட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி, 56, இவருடைய மகன் பரத்குமார் டிப்ளமோ படித்துள்ளார். இவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, 2019ல், கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த மாரித்துரை 3 தவணைகளில் ரூ. 9 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் காலம் தாழ்த்தியுள்ளார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை