உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மின்சாரம் தாக்கி பலியானவரின் கண் அரசு மருத்துவமனைக்கு தானம்

 மின்சாரம் தாக்கி பலியானவரின் கண் அரசு மருத்துவமனைக்கு தானம்

விருதுநகர்: விருதுநகர் நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனிமுருகன் 47. இவர் வீட்டில் மின்சாரம் தாக்கி பலியானார். இவரின் இரு கண்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. விருதுநகர் நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனி முருகன், வீட்டில் சூடம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் வீட்டில் தண்ணீர் மோட்டார் போடும் போது மின்சாரம் தாக்கி நவ.20ல் காலை 7:30 மணிக்கு பலியானார். இவரின் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இறந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் பழனிமுருகனின் இரு கண்களும் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவ குழுவினரால் காலை 10:55 மணிக்கு தானமாக பெறப்பட்டது. இந்த கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண் தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது உடனடியாக பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை