உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெள்ள பாதிப்பிற்கு தேவையான நிதியை பிரதமர் வழங்குவார்

வெள்ள பாதிப்பிற்கு தேவையான நிதியை பிரதமர் வழங்குவார்

சிவகாசி : லோக்சபா தேர்தல் வருவதால் தமிழக வெள்ள பாதிப்பிற்கு தேவையான நிதியை பிரதமர் மோடி வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது , என சிவகாசியில் மாணிக்கம்தாகூர் எம்.பி., தெரிவித்தார்.சிவகாசியில் ரூ.80லட்சத்தில் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளுக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் மேலும் அவர் கூறியதாவது:மாநில அரசு நிவாரணம் அளித்து இருந்தாலும், பாதிப்பு அதிகமாக இருப்பதால், இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து குழு அமைக்கப்பட்டு உள்ளது.ஜன. 14 ல் தொடங்கும் பாரத் ஜோடோ நீதி யாத்ரா 90 நாட்களில் 6500 கி. மீ., கடந்து 100 மக்களவை தொகுதிகளில் ராகுல் பேசவுள்ளார். இந்த யாத்திரை மிகப்பெரிய திருப்பு முனையாக இண்டியா கூட்டணிக்கு அமையும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை