உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொபைல் செயலியில் மின் இணைப்புக்கு ஒப்புதல் தரும் சோதனை திட்டம் வெற்றி

மொபைல் செயலியில் மின் இணைப்புக்கு ஒப்புதல் தரும் சோதனை திட்டம் வெற்றி

சென்னை:மொபைல் செயலியில் புதிய மின் இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பது, மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது உள்ளிட்ட சோதனை திட்டம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இத்திட்டத்தை மாநிலம் முழுதும் விரைவில் செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழக மின் வாரியம், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, களப்பிரிவு ஊழியர் மொபைல் செயலி அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி, ஊழியர்களின் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது. அதில், மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.இதனால் கட்டண விபரம், நுகர்வோருக்கு உடனே அனுப்பப்படுகிறது.மொபைல் செயலியில் கூடுதல் சேவையாக, மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட மற்றும் மீண்டும் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் கண்டறிவது, புதிய மின் இணைப்புக்கு ஒப்புதல் வழங்குவது, குறைபாடு உடைய மீட்டருக்கு பதில், புதிதாக மாற்ற ஒப்புதல் தருவது உள்ளிட்ட கூடுதல் சேவைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இத்திட்டம் சோதனை முயற்சியாக, சென்னை உட்பட மாநிலம் முழுதும் உள்ள, 12 மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பிரிவு அலுவலகத்தில், ஜனவரியில் செயல்படுத்தப்பட்டது. இது, வெற்றிகரமாக அமைந்துள்ளதால், மாநிலம் முழுதும் முழுவீச்சில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய உதவி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:மொபைல் செயலியில், மின் கட்டணம் செலுத்தாமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பின், மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் அறிய முடிகிறது. புதிய மின் இணைப்பிற்கு ஒதுக்கப்படும் மீட்டர் எண்களும் உடனே பதிவு செய்து ஒப்புதல் தரப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு வந்து, கணினியை பார்த்து ஒப்புதல் அளிக்கும் நேரம் குறைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ