| ADDED : மே 27, 2024 04:19 AM
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், ஜெயலலிதா அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த லேப்டாப்புகள், தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தப்பட்டது. இன்னும் சில நாட்களில், புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான லேப்டாப்புகளை வழங்குவது குறித்து, எவ்வித அறிவிப்பும் தி.மு.க., அரசு வெளியிடாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது.லேப்டாப் வழங்க வேண்டும் என்ற, அரசு பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை, இந்த ஆண்டாவது தி.மு.க., அரசு நிறைவேற்ற முன்வருமா அல்லது ஜெயலலிதா அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்ற காழ்ப்பில், இந்த ஆண்டும் முதல்வர் ஏதேனும் நொண்டிச்சாக்கு சொல்லப் போகிறாரா?-பழனிசாமி,அ.தி.மு.க., பொதுச் செயலர்.