உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முள்ளிப்பள்ளம் காஞ்சி மடத்தில் கோசாலை கட்டும் பணி தீவிரம்

முள்ளிப்பள்ளம் காஞ்சி மடத்தில் கோசாலை கட்டும் பணி தீவிரம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, சோழவந்தான் முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி மடத்தில் கோசாலை கட்டுமான பணி நடக்கிறது.காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவின்படி, முள்ளிப்பள்ளம் மடத்தில் தினமும் பூஜை, மாலையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் தகுதியுடைய ஆசிரியர்கள் வாயிலாக கடந்தாண்டு நவம்பர் முதல் நடந்து வருகிறது. மே மாதம் சங்கர ஜெயந்தியை முன்னிட்டு, மாணவர்களுக்கு பண்பு பயிற்சி முகாம் நடந்தது. மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நாட்டு மாடு பால் வழங்கப்படவுள்ளது. மாடுகள் தற்போது மடத்தின் கட்டுப்பாட்டில் வளர்க்கப்படுகின்றன. இம்மாடுகளை பராமரிக்க கோசாலை கட்டுமான பணி விரைந்து நடக்கிறது. பொதுமக்கள் இந்த கைங்கரியத்தில் பங்கு கொண்டு குரு அருள், திரு அருள் பெறலாம். இதுதொடர்பாக, பொறியாளர் ஸ்ரீ.குமாரை 94431 51258, 99948 67791 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி