மேலும் செய்திகள்
கரூர் சம்பவத்தில் 3 குற்றவாளிகள்
27 minutes ago
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
35 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
38 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
46 minutes ago
சென்னை:தமிழக அரசு சார்பில், 2024ம் ஆண்டுக்கான நல் ஆளுமை விருது, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட ஆறு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.முதல்வரின் முகவரித்துறை தலைமை தகவல் தொழில்நுட்ப அலுவலர் வனிதா; விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன்; பொது நுாலகங்கள் துறை இயக்குனர் இளம்பகவத்; உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன்.மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனர் திவ்யதர்ஷிணி; திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர், நல் ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில், வனிதா, கோபாலகிருஷ்ணன் தவிர மற்றவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். ஆறு பேருக்கும் தலா, 2 லட்சம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ், சுதந்திர தின விழாவில் முதல்வரால் வழங்கப்படும்.பாராட்டு சான்றிதழ் பெற, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் மதுசூதன் ரெட்டி, வணிகவரி கமிஷனர் ஜகந்நாதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தலைமை செயலர் பாராட்டு சான்றிதழை வழங்குவார். இதற்கான அரசாணையை பொதுத்துறை செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.
27 minutes ago
35 minutes ago
38 minutes ago
46 minutes ago