உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழக்கு போட்டுக் கொண்டே இருப்போம்: ஓய்வு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சொல்கிறார்

வழக்கு போட்டுக் கொண்டே இருப்போம்: ஓய்வு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சொல்கிறார்

பொள்ளாச்சி: சிவனடியார்கள், முருகபக்தர்கள் அனைத்து ஆன்மிக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மிக விழா, பொள்ளாச்சியில் நடந்தது. அதில், பங்கேற்ற பொன் மாணிக்கவேல், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஹிந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38,688 கோவில்களில் நிர்வாகம் நடத்துவதாக கூறுகின்றனர். அதில், 34,119 கோவில்களில் ஒரு நாள் வருமானம், 13.69 பைசா முதல், 27 ரூபாய் வரை தான்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vpjahfh0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த கோவில்களுக்கும் வரி போடப்படுகிறது. கடந்த ஆட்சியில், 2017 - 18ம் ஆண்டு, 340 கோடி ரூபாய்; 2018 - 19ம் ஆண்டு, 380 கோடி ரூபாய் வரி போட்டுள்ளனர்.தற்போது இந்த அரசு ஆட்சிக்கு வந்ததும், 2021ல், 427 கோடியே 87 லட்சம் ரூபாய் வரி போட்டுள்ளனர். இந்த உண்மை யாருக்கும் தெரியவில்லை. இது மட்டுமல்லாமல், ஆடிட் வரி என அதற்கு ஒரு வரி வசூலிக்கின்றனர்.பகைவர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் கூட இந்தளவு கோவில் மீது வரி போடவில்லை. தற்போது, 2,000 ரூபாய்க்கு ஓட்டு வாங்கும் ஜனநாயகத்தில், வரி போட்டது மட்டுமல்லாமல் மாதாமாதம் கையாடல் குறித்து கண்டறியப்படுகிறது.அரசை தேர்வு செய்து, கோவில்களை ஒப்படைக்கிறோம். ஆனால், கையாடல், நம்பிக்கை துரோகம் செய்வது ஏற்க முடியவில்லை. ஒரு டீ விலை 15 ரூபாய். ஆனால், கோவில் வருமானம் 14 ரூபாய் தான். ஒரு நாள் வருமானம் கூட குறைவாக வரக்கூடிய கோவில்களுக்கு வரி போடப்படுகிறது. இந்த கோவில்களுக்கு அதிக வருமானம் வரக்கூடிய கோவிலில் இருந்து பணம் எடுத்து தருவதாக கூறுகின்றனர். இதை செய்ய இவர்கள் யார்?நிறைய பிரச்னைகள் உள்ளன; வழக்கு போட்டுக் கொண்டே இருப்போம். தமிழகத்தில் கோவில்கள் சம்பந்தமாக எழும் போது, பிரச்னைகளுக்கு அனைவரும் ஒன்றாக நின்று போராட வேண்டும். இதற்காக முயற்சி எடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

canchi ravi
ஏப் 29, 2024 13:45

கோவில் நிர்வாக்கத்திலிருந்து அரசு விலகவேண்டும்


Sampath Kumar
ஏப் 29, 2024 11:38

கடந்த ஆட்சில் வரி போட்டாங்க என்று சொல்லும் நீங்கள் அப்போவே ஏன் வழக்கு போடவில்லை


veeramani
ஏப் 29, 2024 10:35

இதற்கு தீர்வு ஆநிமி க அன்பர்கள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவுதான் முதலில் வருமானம் வருகின்ற கோயில்களை வரிசைப்படுத்துங்கள் சுமார் இரண்டு ஆயிரம் கோயில்கள் இந்த வரிசையில் வரலாம் கோயில் வருமானத்தை மற்றைய சிலவினைகளுக்கு கொடுப்பது நல்லதல்ல தேவைப்படின் தேர்தல் கமிஷன் போல அரசியல் இல்லாத நடுநிலை அமைப்பை கொண்டு அறநிலையத்துறை உருவாக்கலாம்


V GOPALAN
ஏப் 29, 2024 09:41

Tamilnadu economy revolving around various temples in every district Naidu Mudaliar, nickels and Pillai were instrumental in constructing these temples Now it is surprised you are all keeping quite for the temple looting by dmk and admk Still if you keep quite, it is sure your future generation will suffer like anything Please come forward If you hate Brahman, we are ready to keep away from temples But take control of all temples and conduct Pooja in a grand manner all g with the people


sridhar
ஏப் 29, 2024 09:18

பாவம், ... ஹிந்துக்கள் ஆதரவு கிடைக்காது


Rajarajan
ஏப் 29, 2024 09:16

தமிழகம் முழுவதும், இறை நம்பிக்கை உள்ளவர்களை ஒருங்கிணைத்து, ஒரு பேரவை துவக்குங்கள் அனைவரும் ஒன்று கூடி, இந்த உண்மையை உரக்க புரியாவையுங்கள் தமிழக கோவில்களை விட்டு, அரசை வெளியேற்றி, ஒரு நம்பிக்கையான பொது நிர்வாகத்திடம் ஒப்படையுங்கள் அப்போது நேரிடையாக, பொதுமக்களிடம் நிதி திரட்டி, பராமரிப்பை மேற்கொள்ளுங்கள் கோவில் சொத்துக்களை கைப்பற்றி, மீண்டும் அந்த அந்த கோவில்களுக்கே ஒப்படையுங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள் இறைவன் உங்களுக்கு நிச்சயம் அருள் புரிவார் அதுசரி, இறை நம்பிக்கை இல்லாத கூட்டத்திற்கு, கோவில் பராமரிப்பு எதற்கு ??


kongu makkal
ஏப் 29, 2024 08:14

தெய்வம் அன்றே தக்க தண்டனை கொடுக்கட்டும்.


S. Gopalakrishnan
ஏப் 29, 2024 06:22

ஐயா, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்‌‌ !


J.V. Iyer
ஏப் 29, 2024 05:48

அய்யா, உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் நீங்கள்தான் அடுத்த தமிழக முதல்வர் அண்ணாமலைஜிக்கு கோவில்களை நன்றாக பராமரிக்க உதவவேண்டும்


V GOPALAN
ஏப் 29, 2024 05:32

நமது உட்சச நீடலிங் மன்றம் பொன்முடி ,கெஜ்ரிவால் விடுவிப்பு கேஸ் குடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ்நாடு கோயில் கொள்ளை நீண்டகால வழக்கு எடுத்துக்கொள்வதில்லை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை