உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம்: ஸ்டாலின்

தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம்: ஸ்டாலின்

சென்னை : முதல்வர் ஸ்டாலின் அறிக்கை: யு.ஜி.சி., நெட் தேர்வு ரத்தானதை தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது, ஆயிரக்கணக்கான மருத்துவர்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வாக இல்லாமல், கையாளாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையின், உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளது. தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத் தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதி செய்ய வேண்டும். அதை, உயர் கல்விக்கு அடிப்படையானதாக்க வேண்டும்.தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில், மாநில அரசின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக, நம் மாணர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம், மீண்டும் நம்பிக்கையை விதைக்க வேண்டும்; சிறப்பான எதிர்காலத்துக்கு திட்டமிட நாம் கைகளை கோர்ப்போம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sankaranarayanan
ஜூன் 24, 2024 21:07

தேர்வு முறைகளை தீர்மானிப்பதில் மாநில உரிமை மீட்போம் என்று கூறும் இவர்கள் நாளைடைவில் தனியார் மருத்தவ கல்லூரிகளில் டொனேஷன் தொகை அதிகரிக்கத்தான் வழி செய்வார்கள் இதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் ஆதலால் இதை இனி நடைமுறைக்கு வர அனுமதிக்கவே கூடாது கூடாது


enkeyem
ஜூன் 24, 2024 18:41

கிழிச்சீங்க. எங்கெனவே ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒழிக்கப் போவதாகக் கூறினார். அந்த இரும்புக்கரம் துரு பிடித்து காயலாங்கடைக்கு போய் விட்டது. போதையை ஒழிக்க சார்வாதிகாரியாக மாறுவேன் என்றார். இப்போது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் உலகம் முழுக்க உங்க மானத்தை கப்பலில் ஏற்றியுள்ளது. இவரது இந்த வீர வசன அறிக்கைகள் இவரது அடிமைகளை வேண்டுமானால் கிளுகிளுப்பு ஏற்ற உதவும்


saravan
ஜூன் 24, 2024 17:08

யார் திண்டுக்கல் லியோனியா? மாணவர்கள் எதிகாலத்தை பாழாக்கிவிடாதீர்கள்... வரும் காலங்களில் தமிழகம் மற்ற மாநிலங்களுடன் போட்டியிடவே இயலாமல் போய்விடும்... அரசியல் வாதிகள் மருத்துவத்திற்காக ஏன் வெளிநாடு போகின்றனர்... இங்கு படித்த மருத்துவர் இல்லையா ?


R.MURALIKRISHNAN
ஜூன் 24, 2024 10:27

அதல்லாம் காவிரி நீரை மீட்ட விஷயத்திலேயே உம்மை பற்றி நன்கு அறிவோம். இன்னும் உம்மை நம்புவார்கள் என்று எதிர்பார்காதீர். யாராவது பண்ணுவாங்க. முடிவில் வந்து ஸ்டிக்கர் ஒட்டி ஒரு போஸ் கொடுத்தா போதும்.


Varadarajan Nagarajan
ஜூன் 24, 2024 10:21

தேர்வுமுறை மாநில அரசிடம் இருக்கவேண்டும். ஆசிரியர்கள் மாணாக்கர்களை கண்டிக்காமல் இணக்கமாக இருக்கவேண்டும். தேர்வு மதிப்பெண்கள் நீக்கு போக்காக இருக்கவேண்டும். சலுகை மதிப்பெண் வழங்கப்படவேண்டும். அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு கூடிய சலுகை அளிக்கவேண்டும். மேல்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இருக்கக்கூடாது. இப்படி பல சலுகைகளை அளித்து வாக்குவங்கியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு என்ன அரசு வேலைகளுக்கு தேர்வு ஆணையம் நடத்தும் தமிழ் பாடத்தில் குறைந்தபட்ச தேர்வு மதிப்பெண் 40 என்று சொன்னால்கூட எதிர்ப்பும் போராட்டமும்தான் மிஞ்சும். அதிலும் தேறுபவர்களுக்கு அரசு வேலை அளித்து மக்களை அலைக்கழிக்கவிட்டு கல்லா கட்டுவதுமட்டுமே நடக்கும்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 24, 2024 10:15

எங்கள் தளபதி சங்கிகளுக்கு பீதியை ஏற்படுத்துகிறார் ..... வேணுகோபால் பெருமிதம் ......


Barakat Ali
ஜூன் 24, 2024 09:37

கள்ளச்சாராய சாவுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆரிய ஒன்றியத்தை எதிர்ப்போம் ...


Barakat Ali
ஜூன் 24, 2024 09:35

இப்படி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிடம் புலம்பி உரிமை கோராமல் தடுத்தது எது ???? சுருட்டும் ஆசை தானே ????


Barakat Ali
ஜூன் 24, 2024 09:34

மீட்போம் என்றால் என்ன பொருள்? ஏற்கனவே மாநில அரசின் கையில் அந்த அதிகாரம் இருந்தது என்றல்லவா பொருள்?? அப்படி இருந்ததா ????


vbs manian
ஜூன் 24, 2024 09:00

எந்த தேர்வும் வேண்டாம் துட்டு யாரிடம் அதிகம் உள்ளதோ அவர்களுக்கே சீட்டு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை