மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
22 minutes ago
பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் யானை தாக்கி, ஆடு மேய்த்து கொண்டிருந்தவர் பலியானார்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியை சேர்ந்தவர் நெருப்பூரான் மாதையன், 55; இவருக்கு, 3 மகன்கள். ஆடு மேய்கும் தொழில் செய்து வந்த இவர், நேற்று மாலை, 4:00 மணியளவில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தொட்டியின் பின்புறமுள்ள பெரியபள்ளம் என்ற இடத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டு யானை, அவரை மிதித்து கொன்றது. பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால், அவரது சடலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுபோல, அடிக்கடி தமிழகம் - கர்நாடகா எல்லையோர கிராமங்களில் யானைகளில் அட்டகாசம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்த கோடை காலத்தில் யானைகள் ஊருக்குள் புகுவதால், அப்பாவி கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
22 minutes ago