உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மயிலாடுதுறை மக்களுக்கு நிம்மதி பெரம்பலுாருக்கு துாக்கம் போச்சு!போக்கு காட்டும் சிறுத்தை

மயிலாடுதுறை மக்களுக்கு நிம்மதி பெரம்பலுாருக்கு துாக்கம் போச்சு!போக்கு காட்டும் சிறுத்தை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மயிலாடுதுறையில் நடமாடுவதாக கூறப்பட்ட சிறுத்தை, அரியலுார் வழியாக தற்போது பெரம்பலுார் மாவட்ட எல்லை கிராமங்களுக்கு நகர்ந்துள்ளதாக வனத்துறையினர் கூறுகின்றனர். தமிழகத்தில் அடர்ந்த வனப்பகுதிகளில் தான் சிறுத்தைகள் வசிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு மாறாக, அடர்ந்த வனப்பகுதிகள் எதுவும் இல்லாத மயிலாடுதுறை மாவட்டத்தின் சில கிராமங்களில், சிறுத்தை நடமாட்டம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாடுவது, ஏப்., 2ல் வனத்துறைக்கு தெரிய வந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகள், எச்சம் ஆகியவற்றின் அடிப்படையில், சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மேற்பார்வையில், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதில், ஏற்கனவே நடமாட்டம் பதிவான இடங்களில், மீண்டும் சிறுத்தை வந்ததற்கான அறிகுறி தென்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அடுத்தடுத்த பகுதிகளில் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் அந்த சிறுத்தை, அரியலுார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்கள் வழியாகச் சென்றது உறுதியானது. இதையடுத்து, சிறுத்தையின் காலடி தடங்கள், எச்சங்கள் அடிப்படையில் அதன் பாதையை வனத்துறையினர் பின்தொடர்ந்து வருகின்றனர். இடம் மாறுது இது குறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுவரை மயிலாடுதுறையில் கவனம் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது அரியலுாரில் சிறுத்தை நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால், அரியலுார் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களில், தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு, 10 கி.மீ., வரை சிறுத்தை இடம் பெயர்வதாக தெரிய வந்துள்ளது. இந்த அடிப்படையில், அதன் நகர்வு தொலைவு மற்றும் திசை கணக்கிடப்பட்டு வருகிறது.காலடி தடம், சிறுநீர் கழித்த அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பாதை கணக்கிடப்பட்டு, கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிறுத்தை தற்போது அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் நடமாடுவதாக தெரிய வந்துள்ளது. இதனால், அடுத்து பெரம்பலுாரில் அதன் நடமாட்டம் இருக்கும் என்று கணக்கிட்டு, 'தெர்மல் ட்ரோன் கேமரா' பயன்படுத்தி, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

2013ல் நடந்தது என்ன?

பெரம்பலுாரில் சிறுத்தை நடமாட்டம் புதிதல்ல. ஏற்கனவே, 2013ல் இங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். அதனால், பெரம்பலுார், கவுல்பாளையம் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குறிப்பாக, அரியலுார் - பெரம்பலுார் நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டத்துக்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்பின், 2013ல் சிறுத்தை பிடிக்கப்பட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராவல், இன்டியா
ஏப் 15, 2024 17:23

கும்கி யானை மாதிரி, கும்கி சிறுத்தை இருந்தா நல்லாயிக்கும். அரசு நடவடிக்கை எடுக்குமா?


ராஷல், இன்டியா
ஏப் 15, 2024 17:20

கும்கி யானை மாதிரி கும்கி இருந்தா நல்லாயிருக்கும். அரசு நடவடிக்கை எடுக்குமா?


Vijay D Ratnam
ஏப் 15, 2024 11:29

பொதுவாக தஞ்சை டெல்டா பாசன பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் என்று நான் கேள்விப்பட்டதே கிடையாது லாரி ஏறி வந்திருக்குமோ அல்லது லாரில கொண்டாந்து இறக்குனாய்ங்களா


அப்பாசாமி
ஏப் 15, 2024 11:19

சிறுத்தை பாவம். கோடை விடுமுறைக்கு ஜாலியா டூர் போயிட்டிருக்கு. அது வாழும் இடங்களை மக்கள் மொய்க்கிறாங்களாம். அவிங்க தொல்லை தாங்காம ஓடி வந்துருச்சு.


A P
ஏப் 15, 2024 08:21

தேர்தல் நேரத்தில் கட்சிகள் ஒன்றை ஒன்று குறை சொல்லி மக்களை திசை திருப்பிக் கொண்டிருப்பதால், இப்படி சிறுத்தை புரளி கிளப்பி விட்டிருக்கிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது சிறுத்தையைப் பிடிக்காவிட்டால் ஆளும் அரசுக்கு மிகவும் அவப் பெயர் கண்டிப்பாக வந்தே தீரும் இதனால் ஆளும் கட்சிக்கே அவப் பெயர் வந்தே தீரும் இப்படிப் பயமுறுத்தினால் மக்கள் வாக்களிக்க வெளியே வர மாட்டார்கள் என்று கூட தீய கட்சிகள் எண்ணியிருக்கலாம்


Kasimani Baskaran
ஏப் 15, 2024 05:25

சிறுத்தை நடமாடும் வழித்தடங்களை காடுகளாக்க வேண்டும் என்று ஒரு கோஷ்டி கானம் பாடுமே காட்டில் வாழ்ந்து பழக்கப்பட்ட விலங்குக்கு கிராமங்களுக்குள் கிடைக்கும் கோழி, ஆடு போன்றவை மீது ஆசைவந்திருக்கும் - ஏனென்றால் காட்டுக்குள் அதிக சக்தியை உபயோகித்துத்தான் வேட்டையாட முடியும் - ஆனால் கிராமங்களுக்குள் எளிதாக உணவு கிடைக்கும்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை