உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 90 அணைகளில் நீர் இருப்பு 50 டி.எம்.சி.,யாக சரிவு

90 அணைகளில் நீர் இருப்பு 50 டி.எம்.சி.,யாக சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகளில் நீர் கையிருப்பு 50 டி.எம்.சி.,யாக சரிந்துள்ளது.நீர்வளத்துறை வாயிலாக, மாநிலம் முழுதும், 90 அணைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும். இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட, 15 அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., ஆகும். சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஆகியவையும் அணைகள் பட்டியலில் உள்ளன. இவற்றின் கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும். மற்ற அணைகள் குறைந்த கொள்ளளவுஉடையவை. தற்போதைய நிலவரப்படி, 90 அணைகளில் நீர் இருப்பு 50.7 டி.எம்.சி.,யாக சரிந்துள்ளது. கடும் வெப்பக்காற்று காரணமாக ஆவியாதல் அளவு அதிகரித்துள்ளதே, இதற்கு காரணம் என்று நீர்வளத்துறையினர் கூறுகின்றனர். இதனால், பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ArGu
மே 08, 2024 14:26

அணை மற்றும் ஏரிகளில் சூரிய மின் திட்டங்களை ஏற்படுத்தலாம் நீர் ஆவியாவதும் தடுக்கப்படும் ஆனா இங்க என்ன விசியம்ன்னா ? டெங்குவுக்கு எவ்ளோ கிடைக்கும்?


naan
மே 08, 2024 10:37

தண்ணீர் இல்லைன்னு ஒருபுறம் புலம்பும்போதே, இன்னொருபுறம், இப்போதாவது நன்கு தூர் வாரி, கொள்ளளவு முழுவதும் தண்ணீர் நிரப்பும் வகையில் வைத்துக்கொண்டால் அடுத்த மழைக்குப்பிறகு கஷ்டம் தீரும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை