உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் 20,691 பேர்: முழு விபரம்

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் 20,691 பேர்: முழு விபரம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு எடுத்தனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20,691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.இது குறித்த முழு தகவல்கள்:

100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாவர்களின் எண்ணிக்கை

தமிழ் -8 பேர்ஆங்கிலம்415 பேர்கணிதம் 20691 பேர்அறிவியல் 5104 பேர்சமூக அறிவியல் 4428 பேர்

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள் -87.90 %அரசு உதவி பெறும் பள்ளிகள் - 91.77%தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 97.43%இருபாலர் பள்ளிகள்- 91.93%பெண்கள் பள்ளிகள்- 93.80%ஆண்கள் பள்ளிகள்- 83.17%

பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்- 96.85%ஆங்கிலம் -99.15%கணிதம் -96.78%அறிவியல்- 96.72%சமூக அறிவியல்- 95.74%மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றனர்.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

அரியலூர் -97.31சிவகங்கை 97.02ராமநாதபுரம்-96.36கன்னியாகுமரி-96.24திருச்சி-95.23விருதுநகர்-95.14ஈரோடு-95.08பெரம்பலூர்-94.77தூத்துக்குடி-94.39விழுப்புரம்-94.11மதுரை-94.07கோவை-94.01கரூர்-93.59நாமக்கல்-93.51தஞ்சாவூர்-93.40திருநெல்வேலி-93.04தென்காசி-92.69தேனி-92.63கடலூர்-92.63திருவாரூர்-92.49திருப்பூர்-92.38திண்டுக்கல்-92.32புதுக்கோட்டை-91.84சேலம்-91.75கிருஷ்ணகிரி-91.43ஊட்டி-90.61மயிலாடுதுறை-90.48தர்மபுரி-90.45நாகப்பட்டினம் -89.70சென்னை- 88.21திருப்பத்தூர்- 88.20காஞ்சிபுரம்-87.75செங்கல்பட்டு-87.38கள்ளக்குறிச்சி-86.83திருவள்ளூர்-86.52திருவண்ணாமலை-86.10ராணிப்பேட்டை-82.48வேலூர்-82.07காரைக்கால்-78.20புதுச்சேரி-91.28

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

2020ம் ஆண்டில் 9,39,829 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.2021 ல் 9,60,216 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.2022ல் 9,12,620 பேர் தேர்ச்சி எழுதியதில் 8,21,994(90.07%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.2023ம் ஆண்டில் 9,14,320 பேர் தேர்வு எழுதியதில் 8,35,614 பேர்(91.39%) தேர்ச்சி பெற்றனர்.2024ல் 8,94, 264 பேர் தேர்வு எழுதியதில் 8,18,743 பேர்(91.55) பேர் தேர்ச்சி பெற்றனர்.

திண்டுக்கல் மாணவி சாதனை

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கொசவபட்டியைச் சேர்ந்த காவ்யா ஸ்ரியா என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு வரும் ஜூலை 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறும்; மறு கூட்டலுக்கு வரும் 15ம் முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

ஸ்டாலின் பாராட்டு!

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்; மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டு அடித்தளத்தை வலிமையாக அமைத்துக்கொள்ள வேண்டும். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sundaran manogaran
மே 10, 2024 20:56

8 ஆங்கிலேயர்கள் தமிழில் சதம் அடித்துள்ளது தமிழுக்கு பெருமை. இப்போது தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளுக்கு தமிழும் தெரியவில்லை ஆங்கிலமும் தெரியவில்லை... பாவம் ஆனால் கல்வி சிறந்த தமிழ்நாடு...


Palanisamy Sekar
மே 10, 2024 15:36

தமிலு தமிலு ன்னு மூசசுக்கு முன்னூறு முறை சொல்லும் அரசியல்வாதிகளுக்கு இந்த தேர்ச்சி சமர்ப்பணம் வாளுக தமிலு


ஆரூர் ரங்
மே 10, 2024 12:32

தமிழில் எட்டு பேர் ஆனால் ஆங்கிலத்தில் நானூற்றுப் பதினைந்து பேர் முழு மதிப்பெண். ...


Svs Yaadum oore
மே 10, 2024 11:27

தமிழில் எப்படிய்யா நூறு சதம் வாங்க முடியும்? இது சாத்தியமா? பதினைந்து வருடம் முன்பு தமிழில் மதிப்பெண் வாங்கினால் அது ரொம்ப பெரிய விஷயம் இப்போது வெறும் டப்பா பாடத்திட்டம் வைத்து வோட்டு வாங்க மதிப்பெண் அள்ளி வாரி வழங்க வேண்டும் என்று அதிலும் அரசியல் இப்படி மார்க்குகள் கொடுத்து விட்டால் மட்டும் படித்து வேலை கிடைக்குமா? இப்போதுள்ள பட்டதாரிக்கு தமிழும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது பொறியியல் படித்து பிறகு சூப்பர்மார்கெட்டில் சரக்கு அடுக்கி வைக்கும் வேலை என்று உயர் நீதிமன்றம் விமர்சனம்


தத்வமசி
மே 10, 2024 11:25

வாழ்த்துக்கள் நீங்களாவது தமிழர்களின் மானத்தை காப்பாற்றினீர்களே மிக்க நன்றி திராவிடம் தமிழ் வளர்த்த லட்சணம் இது தான் எந்த கல்லூரியிலும் தமிழ்த் துறையில் மாணவர்கள் கிடையாது தமிழ் மொழி விருப்பப்பாடமாக மாறியது தான் மிச்சம் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டதால் தமிழ் அங்கு ஊசலாடிக் கொண்டிருக்கிறது இல்லையென்றால் அங்கும் காலி தான் இதில் கருணாநிதி பற்றி மக்கள் படிக்க வேண்டுமாம் இந்தவருடம் தமிழ் பாடத்தில் புகுத்தியிலுள்ளனர் இதில் இந்தி எதிர்ப்பு வேறு பல மொழிகளை கற்பதால் தான் மாணவர்களின் அறிவும் திறமையும் வளரும் இதில் எந்த நக்கல் நையாண்டியும் தேவையில்லை திருட்டு திராவிடம் இப்போது உருட்டு திராவிடமானது தான் மிச்சம்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ