உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

சேலம்: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2ம் கட்டமாக நேற்று, சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிகளை புறக்கணித்து, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து, மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறியதாவது:அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும்; 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 13ல் போராட்டம் நடந்தது.தமிழக முதல்வர் பேச்சு நடத்தவில்லை. இதையடுத்து பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளோம்.இதனால் தேர்தல் பணி, சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட வருவாய் துறை பணிகள் முழுமையாக பாதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
பிப் 23, 2024 07:55

இந்த வருவாய் துறை அலுவலர்களால் அரசுக்கு வருவாய் ஏதும் இல்லை. அலுவலர்களின் வருவாய் பெருக்கிக்கொள்ள ஏன் வருவாய் துறை என பெயர்பெற்றது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை