உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உருவானது டிட்வா புயல்; நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட்

உருவானது டிட்வா புயல்; நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட்

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டிட்வா' புயலாக வலுப்பெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qfdronzh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டிட்வா' புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும். இன்று (நவ.,27) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * புதுக்கோட்டை * ராமநாதபுரம்* தஞ்சை* திருவாரூர்* நாகப்பட்டினம்நாளை (நவ.,28) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* புதுக்கோட்டை* தஞ்சை* திருவாரூர்* நாகப்பட்டினம்நாளை (நவ.,28) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராமநாதபுரம், * சிவகங்கை,* திருச்சி, * அரியலூர் * மயிலாடுதுறை நாளை (நவ.,28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தூத்துக்குடி* விருதுநகர்* மதுரை* பெரம்பலூர்* கடலூர்நாளை மறுநாள் (நவ.,29) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நாகப்பட்டினம்* திருவாரூர்* மயிலாடுதுறை* கடலூர்* விழுப்புரம்* செங்கல்பட்டுநாளை மறுநாள் (நவ.,29) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தஞ்சை* அரியலூர்* பெரம்பலூர்* கள்ளக்குறிச்சி* திருவண்ணாமலை* வேலூர்* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* சென்னை* திருவள்ளூர்நாளை மறுநாள் (நவ.,29) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* புதுக்கோட்டை* திருச்சி* கரூர்* நாமக்கல்* சேலம்* தர்மபுரி* கிருஷ்ணகிரி* திருப்பத்தூர்நவ.,30ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* செங்கல்பட்டு* காஞ்சிபுரம்* ராணிப்பேட்டை* சென்னை * திருவள்ளூர்நவ.,30ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* தர்மபுரி* கிருஷ்ணகிரி* திருப்பத்தூர்* திருவண்ணாமலை* வேலூர்* விழுப்புரம்இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை