மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
23 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
26 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
34 minutes ago
கோவை: முல்லைபெரியாறு, மாநில சுயாட்சி, தமிழ் ஆட்சிமொழி, இலங்கை விவகாரம் , சேதுசமுத்திர திட்டம், பெண்கள் இடஒதுக்கீடு, கச்சத்தீவு மீட்பு என தவறாமல் எல்லா பொதுக்குழுவிலும் இடம் பெறும் விஷயங்கள் இன்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவிலும் அப்படியே இடம் பிடித்தன. தி.மு.க., பொதுக்குழு இன்று காலை 10. 30 மணியளவில் துவங்கியது.50 பக்கங்கள் கொண்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. கடந்த மத்தியமைச்சரவை மாற்றத்தில் தி.மு.க., இடம்பெறாத இந்தவேளையில் இது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும், காங்கிரஸ் உறவில் மாற்றம் இருக்கும் அளவிற்கு இரு கட்சிகள் இடையே பெரும் பிரச்னைகள் இல்லையென்றாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு, தி.மு.க.,வுக்கு பெரிய அளவில் உதவிகள் எதுவும் செய்யவில்லை என்ற குறையும் தி.மு.க.,வில் சிலருக்கு இருப்பதால் இன்று நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் என்னவாக இருக்கும் என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பெரிய அளவில் சொல்லப்படும் அளவிற்கு பரபரப்பான தீர்மானங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு: சமீபத்தில் முடிந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பது, ஓய்வின்றி உழைத்து மக்களின் நலனுக்காக பல்வேறு சாதனைகள் புரிந்து பொற்கால ஆட்சியை தந்த கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்தல் , தென்மாவட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தல், முல்லைபெரியாறு உரிமையை நிலைநாட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு துணையாக இருக்க வேண்டும், மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் தொடர்பான விஷயங்களில் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசிடம் கோரல், 33 சத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வலியுறுத்தல், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து கடந்தகால திட்டங்களான மேலவை, சமச்சீர்கல்வி, புதிய தலைமை செயலகம், கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்டவைகளை ரத்து செய்த அ.தி.மு.க, வின் வெறுப்பு அரசியலுக்கு கண்டம் தெரிவித்தல், மத்திய ஆட்சிமொழி குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும், தமிழ் மொழி கோர்ட்டில் வழக்கில் வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தல், இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தவர்கள் மீதான உரிய நடவடிக்கை எடுக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை வலியுறுத்க்கோரல், இலங்கை வாழ் தமிழர்கள் அமைதிக்கு பொது வாக்கெடுப்பு , இலங்கை தமிழ் ஈழ மக்களின் தனி உரிமைக்கு என்றும் துணை நிற்பது, கச்சத்தீவு மீட்க போராடுவோம் என்ற கூறிய ஜெயலலிதா இது வரை முயற்சிக்காமல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய சந்தர்ப்பவாத அரசியலுக்கு கண்டனம், கச்சத்தீவை மீட்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை, லோக்பாலில் பிரதமரை சேர்க்க வலியுறுத்தல், தி.மு.க., வினர் மீது போடப்படும் தமிழக போலீசாரின் பொய்வழக்குகளுக்கு கண்டனம், ஸ்பெக்டரம் விவகாரத்தினால் மத்திய அமைச்சர்கள் பதவியை இழந்து நிற்கும் தயாநிதி, ராஜா குற்றமற்றவர்கள் என நிரூபிப்பர் என இந்த பொதுக்குழு நம்புகிறது. இது போன்று 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பபட்டுள்ளன.கனிமொழியை ஜாமினில் விடாத சி.பி.ஐ.,க்கு கண்டனம்: இன்றைய தி.மு.க., பொதுக்குழுவில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கூறப்பட்டிருப்பதாவது: 2ஜி. விவகாரம் தொடர்பாக பார்லி., கூட்டுக்குழு, பொதுக்கணக்குகுழு, சிவராஜ்பாட்டில் தலைமையிலான குழு ஆகியவை விசாரித்து வருகிறது. 2001 முதல் பா.ஜ., ஆட்சி காலம் முதல் இதில் பின்பற்றப்படும் கொள்கை குறித்து எதுவும் முழுமை பெறாத நிலையில் எதிர்கட்சிகள், மற்றும் சில ஏடுகள் பிரச்னை எழுப்பியதன் காரணமாக மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி, ராஜா ஆகியோர் ராஜினாமா செய்திருக்கின்றனர். அவர்கள் கூறியது போல குற்றமற்றவர்கள் என நிரூபிப்பார்கள் என இந்த பொதுக்குழு நம்புகிறது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ., ஒருதலைப்பட்சமாக நடந்து வருகிறது. பிரச்னைக்கு தொடர்பில்லாத கலைஞர் தொலைக்காட்சியின் வரவு செலவு கணக்கை கையிலெடுத்து இந்த நீதிக்கும், நியாயத்திற்கும் சூழ்நிலைக்கும் புறம்பாக தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், பங்குதாரரான கனிமொழி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பணம் குறித்து வழங்கப்பட்ட காசோலை மற்றும் வருமான வரி துறையினரிடம் முறையான சமர்ப்பிப்பு ஆகியன உள்ளது. ஆனால் இவர்களை ஜாமினில் கூட விட சி.பி.ஐ.,மறுத்து வருகிறது. நீதிபதிகள், சட்டஅமைச்சர் வீரப்பமொய்லி, ஜஸ்வந்த்சிங் ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு வராமல் புரியாதவர்கள் சிறையில் இருக்க வேண்டுமா என்று கேள்விகள் வந்தும் சி.பி.ஐ., மறுக்கும் செயல் உள்நோக்கம் கொண்டது, பாரபட்சமானது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்சியை வலுப்படுத்த கமிட்டி: தி.மு.க.,வை வலுப்படுத்த கழக அமைப்புமுறை ஆலோசனைக்குழு அமைக்கப்படும் . இந்த கமிட்டியில் இளங்கோவன் எம்.பி., பொன்முத்துராமலிங்கம், ஜி.எம்.ஷா., பிச்சாண்டி, முகம்மதுஷகி, வி.பி.,ராஜன், பாஸ்கர் சுந்தரம் ஆகியோர் இடம்பெறுவர். இந்தக்குழு புதிய சட்டதிட்டம் குறித்து தயார் செய்யும் இவை பொதுக்குழுவில் வைத்து அங்கீகாரம் பெறப்படும்இன்று காலை பொதுக்குழு அரங்கத்திற்கு கட்சி தலைவர் கருணாநிதி 10. 30 க்கு வந்தார். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அரங்கினுள் செல்ல முற்பட்டனர். இதனை காவலர்கள் தடுத்தனர். இதனால் தள்ளு, முள்ளுவும், விவாதமும் ஏற்பட்டது. பின்னர் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் துவங்கியதும் புகைப்படம் எடுத்து சில நிமிடங்களில் அனைவரும் வெளியே செல்ல வேண்டும் என்பது அந்த நிபந்தனை.செயற்குழு எப்படி இருந்தது ? நேற்று ( சனிக்கிழமை) காலை பரபரப்புடன் கூடிய தி.மு.க., செயற்குழுவில், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. தேர்தல் தோல்விக்கு, கூட்டணிக் கட்சிகளே காரணம் என, பெருவாரியான உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். கூட்டணிக் கட்சிகளை குற்றம் சாட்டிய அதே அளவுக்கு, குடும்ப ஆட்சியையும் சுட்டிக் காட்டினர். '2ஜி' விவகாரத்தாலும், செயற்குழு சூடுபிடித்தது.கோவையில், தி.மு.க., செயற்குழு நேற்று மாலை துவங்கியது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, செயற்குழுவை துவக்கி வைத்து பேசினார். அவரைத் தொடர்ந்து, பொதுச் செயலர் அன்பழகன் பேசினார். இவர்களுக்குப் பின், செயற்குழு உறுப்பினர்கள் பேசினர். ஸ்டாலின், அழகிரி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், பதட்டத்துடனே செயற்குழு காணப்பட்டது. பொதுவான விஷயங்களை விட, கட்சித் தலைமையில் மாற்றம் வேண்டும் என, ஸ்டாலின் தரப்பினர் உறுதியாக உள்ளனர். தலைமை மாற்றம் ஸ்டாலினுக்கு சாதகமாக இருந்துவிடும் என்பதால், 'கருணாநிதியே தலைவராகத் தொடர வேண்டும்; தொடருவார்' என, அழகிரி பகிரங் கமாக அறிவித்து விட்டார்.இதனால், தலைமை மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக அழகிரி கோஷ்டியினர் நினைக்கின்றனர். ஆனால், செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் ஸ்டாலினுக்கு உள்ள ஆதரவைக் கொண்டு, மாற்றங்களைக் கொண்டு வந்துவிடலாம் என்ற அச்சமும் அழகிரி கோஷ்டியினருக்கு இருக்கிறது. இதனால், செயற்குழுவுக்கு முன்னதாக, கருணாநிதியை அழகிரி சந்தித்தார். அப்போது, செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் பற்றி அவர்கள் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக, கோவையில் முகாமிட்டுள்ள ஸ்டாலின், இறுக்கமாகவே காணப்பட்டார். தி.மு.க., செயற்குழு கூட்ட துளிகள்.....செயற்குழு கூட்ட அரங்கிற்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு ஒரு பாதையும், வி.ஐ.பி.,களுக்கு ஒரு பாதையும், பிரதிநிதிகளுக்கு ஒரு பாதையும், பத்திரிகையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சென்று வரவும் ஒரு பாதை என, தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன.கூட்ட அரங்கில் உள்ளே நுழைந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ஆகியோரிடம் கையெழுத்து பெறப்பட்டு, கடிதம் காட்டப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், வி.ஐ.பி., நுழைவாயிலில் கையெழுத்து போடாமல் உள்ளே சென்றார்.தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரி, ஆற்காடு வீராசாமி, அன்பழன், டி.ஆர்.பாலுவும், பரிதி இளம்வழுதி ஆகியோர் கையெழுத்து போடாமல், தி.மு.க., தலைவர் வரும் பாதையில் உள்ளே நுழைந்தனர்.தி.மு.க., தலைவர் கருணாநிதியை, பொருளாளர் ஸ்டாலின் வாசல் வரை வந்து அழைத்துச் சென்றார்.தென் மண்டல அமைப்பு செயலர் அழகிரிக்கு முதல் வரிசையும், பல முன்னாள் அமைச்சர்களுக்கு கடைசி இருக்கைகளும் வழங்கப்பட்டிருந்தன.அழகிரி வந்த காரின் சிவப்பு விளக்கு, துணியால் மறைக்கப்பட்டிருந்தது.செயற்குழு அரங்கில் பத்திரிகை புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்பட்டவுடன், முதலில் அழகிரியை படம் எடுத்த பின்புதான், மேடை நோக்கி திரும்பினர்.செயற்குழு கூட்டத்திற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி வந்திருந்தார்..
23 minutes ago
26 minutes ago
34 minutes ago