உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் திமுகவே காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் திமுகவே காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ''ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் திமுக தான் காரணம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: காங்கிரசும் - திமுக.,வம் 1974ல் திட்டமிட்டு சதி செய்து தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்திருக்கிறார்கள். இதில் திமுக.,வுக்கு முழு பங்களிப்பு இருக்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நாடகத்திற்காக கச்சத்தீவை மீட்டு தாருங்கள் என பலமுறை கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடம் கொடுக்க கருணாநிதியிடம் வெளியுறவு செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.அன்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கச்சத்தீவை கொடுக்க சம்மதம் இல்லை என கூறியிருந்தால் மத்திய அரசு அதனை கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்போது கச்சத்தீவை கொடுக்க சம்மதித்துவிட்டு இப்போது கடிதம் எழுதுகின்றனர். காங்கிரஸ் - திமுக எப்போதெல்லாம் ஒன்று சேர்கிறார்களோ, அப்போதெல்லாம் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதி மற்ற நாடுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். இந்திய இறையாண்மை மீது திமுக.,வுக்கு நம்பிக்கை இருக்கிறதா? ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுக தான்.கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைப்பது தெரிந்தும் கருணாநிதி ரகசியம் காத்துள்ளார். பெரிய அளவில் போராட்டம் வெடிக்காமல் பார்த்து கொள்வதாகவும் கருணாநிதி உறுதி அளித்திருந்தார். கச்சத்தீவு பிரச்னையை தீர்ப்பதற்கு என்னவெல்லாம் சாத்தியக்கூறுகள் இருக்கிறதோ, அதெல்லாவற்றையும் மத்திய அரசு ஆராய்ந்துக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளது. தமிழக பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு மீட்பது பற்றி இருக்கும். இது எங்கள் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

விவசாயி
ஏப் 02, 2024 09:35

என்னையா இது! ?


venugopal s
ஏப் 02, 2024 06:12

வானத்தில் நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் திமுக தான் காரணம் என்று சொல்ல மறந்து விட்டீர்களா?


RAAJ
ஏப் 01, 2024 20:30

நீங்கள் தினமும் திமுகவை இசைப்பாடுகிறீர்கள் ஆனால் அமித்ஷா அவர்கள் திமுகவுடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக கொள்ளையடிப்பதற்கு செயல்படுகிறார். எதற்கு இந்த ரெட்டை வேடம் நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வது நல்லது இல்லாவிட்டால் பிஜேபி யால் உங்களுக்கு அவமானம் தான் ஏற்படும். மத்திய அரசின் உருகு இல்லாத காரணத்தால் தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி நிறைய அவமானங்களை சந்தித்து உள்ளதை சகித்துக் கொள்ள முடியவில்லை. மத்திய அரசின் அதிகார பலம் இருந்தும் ஸ்டாலின் அரசு அவர் குடும்பம் இஷ்டம்போல் ஆடுகிறார்கள் அவர்களை அடக்குவதற்கு திராணி இல்லை. கண்டபடி மத்திய அரசையும் மோடியையும் வசை பாடுகிறார்கள் நிதியமைத்தரை கிண்டல் செய்கிறார்கள் கொஞ்சம் கூட வெட்கம் மானம் ரோஷம் எதுவுமே இல்லாமல் திமுகவுடன் மறைமுக உறவு வைத்துக் கொண்டு திமுகவின் பி டீம் போல் செயல்படுகிறது மத்திய அரசு. வெட்கக்கேடான விஷயம் மக்கள் மத்திய அரசின் மிருதுவான போக்கை பார்த்து குமுறிக் கொண்டுள்ளனர்.


முருகன்
ஏப் 01, 2024 19:10

தமிழ் நாடு ஏதோ தனி நாடு அதனை திமுக ஆளுவது மாதிரி பேசுகிறார் மத்திய கடல் பாதுகாப்பு யாரிடம் உள்ளது உங்களிடம் தானே


Ashok
ஏப் 01, 2024 20:08

uppi.. he says Karunaanidhi was well informed and he accepted to give Katchatheevu to Srilanka.. this VIDIYAL gang was bluffing that it was given without asking their GOVT at that time.. Read the minutes of the meeting . MK was culprit.. DMK is culprit.. now in every election Menifesto they include revlcovering Katchatheevu.. 200 Rs Uppis belive that too


Youvaraj V
ஏப் 01, 2024 17:41

ஹாய் UP 2௦௦ வந்துடும்ல


Neutrallite
ஏப் 01, 2024 17:29

ராமர் இலங்கை அரசன் ராவணனோடு தான் போரிட்டார் அப்போ அது எப்படி நம்ம நாட்டு பகுதி ஆக இருக்கும்


பேசும் தமிழன்
ஏப் 01, 2024 18:13

....இலங்கையை இந்தியா சொந்தம் கொண்டாடவில்லை ....நமது நாட்டின் ஒரு பகுதியை . ..தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து ....இலங்கைக்கு தாரை வார்த்து இருக்கிறார்கள் ....


அப்புசாமி
ஏப் 01, 2024 17:06

இந்தியாவிற்கு சொந்தமான இலங்கையை ராமர் ற்றேதா யுகத்திலேயே தூக்கி குடுத்துட்டு வந்துட்டாரு. அப்போது அமைச்சராயிருந்த வசிஷ்டர், ஜாபாலி முனிவர் எவ்வளவோ தடுத்தும் ராமர் தன்னிச்சையா இலங்கையை விபுஷணனுக்கு குடுத்துட்டார். இல்லேன்னா இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியா இருக்கும்.


varatha rajan
ஏப் 01, 2024 16:38

சார் நல்ல டைம் பாஸ்


தமிழ்வேள்
ஏப் 01, 2024 16:36

முழு உண்மை மீனவர்கள் எல்லைதாண்டி , மீன் குஞ்சுகளை கூட விடாமல் பிடித்து அழிப்பது , மீன்பிடி படகுகளில் , போதை பொருள் முதல் , சட்டவிரோத தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனைத்தயும் கடத்தி கொள்ளையடிப்பது போன்றவை , திமுகவின் ஆசி இல்லாமல் நடைபெற வாய்ப்பே இல்லை மீனவர்கள் மத்தியில் பரவியுள்ள திரு [ட்டு ]சபைகள் திமுகவின் நலனுக்காக கலவரம் , கலாட்டாக்களை தூண்டுவதும் அதிகம் நடக்கிறது இவர்கள் ஆட்சிக்கு வரும்போது மட்டும் இவ்வளவும் வெளிப்படையாக நடக்கும் இந்த திருட்டு கட்சி ஒழிக்கப்பட்டால் , பாதிக்கு மேற்பட்ட தமிழகம் உருப்படும் தமிழகத்தை இரண்டு அல்லது மூன்றாக பிரிப்பது ,சென்னையை தனி யூனியன் பகுதியாக்குவது ஆகியன , தமிழகத்தை விரைவில் உருப்படியாக இருக்க செய்யும் வழியாகும் திருட்டு திராவிடம் இந்த வழியின் மூலமே இல்லாமல் போகும் அவர்களை அழிக்க வேறு வழி கிடையாது


மகாலிங்கம், கோவை
ஏப் 01, 2024 16:25

100% உண்மை


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை