உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல ஐகோர்ட் கண்டனம்

அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல ஐகோர்ட் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'தங்கள் கவனத்துக்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத் துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல' என சென்னை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.கடந்த 2006ல் நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சென்னையை சேர்ந்த, 'ஆர்.கே.எம்.பவர்ஜென்' நிறுவனத்துக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. அதேபோல அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.இந்த வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த கூடுதல் அறிக்கை அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் ஆர்.கே.எம்.பவர்ஜென் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 901 கோடி ரூபாய் வங்கி 'பிக்சட் டிபாசிட்' தொகையை முடக்கி உத்தரவிட்டது.இதை எதிர்த்து ஆர்.கே.எம்.பவர்ஜென் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. தங்கள் கவனத்துக்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத்துறை 'சூப்பர் போலீஸ்'அல்ல.எனவே வங்கி நிரந்தர வைப்பீட்டு தொகையை முடக்கி அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Padmasridharan
ஜூலை 22, 2025 08:15

சூப்பர் அடி.. காவல்துறையே எந்த புகாரும் அளிக்கப்படாமல்தான் கடற்கரை போன்ற பொது இடங்களில் புகார் வந்த மாதிரி, மக்களை அதட்டி, மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்கியும், வண்டியில் உட்கார வைத்து அறைக்கும் கூட்டி செல்கின்றனர். சென்னை, திருவான்மியூர் கடற்கரையிலிருந்து


Rajasekar Jayaraman
ஜூலை 21, 2025 19:36

தமிழக போலீஸ் லட்சணம் உலகம் முழுக்க தெரியுமே அதுபோல் அமலாக்கத்துறை உழலுக்கு துணை போகாதுதான்.


theruvasagan
ஜூலை 21, 2025 16:03

தங்களைத் தவிர தன்னிச்சையான அதிகாரம் யாருக்கும் இருக்கக் கூடாது என்கிற எண்ணம் சமீப காலமாக நீதித்துறையில் ஊடுருவி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது. அது நல்லதல்ல. நீதித்துறைக்கு மற்ற அரசியல் சாசன அமைப்புகளை விட மேலோங்கிய அதிகாரம் கிடையவே கிடையாது.


Ganesan
ஜூலை 21, 2025 14:16

சரியான கேள்வி மற்றும் கிழித்து விட்டார்கள் அமலாக்க துறையை, அமலாக்கதுறை இல்லை.


Ganesan
ஜூலை 21, 2025 14:16

அடியாள் வேலை பார்க்கும் அமலாக்கதுறைக்கு ஏன் சட்டம் தெரியவேண்டும்?


Ganesan
ஜூலை 21, 2025 14:15

தினசரி பத்திரிக்கைகள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. எங்களுக்கும் கேட்பதை விட, படித்துப் பார்ப்பதில்தான், அதிக ஆர்வமும் புரிதலும் ஏற்படுகின்றன. அடுத்தநாள் பத்திரிக்கைகளில் இம்மாதிரி செய்திகளை தேடிப் பார்க்கிறோம், கிடைப்பதில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது


மொட்டை தாசன்...
ஜூலை 21, 2025 11:57

கட்டு கட்டாக பணத்தை வீட்டில் பதுக்கிவைத்து அதற்க்கு இதுவரை பதில் சொல்லாமல் இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டு...அதை முதலில் செய்யுங்கள் சூப்பர் நீதிபதியவர்களே.


Balasubramanyan
ஜூலை 21, 2025 11:20

Judges are not super humabeings. Have you gone thoroughly the misdeeds of that company. Police we know how they will enquire. Like that now judges also. Not going deeply on the ges.


Ramalingam Shanmugam
ஜூலை 21, 2025 10:55

அவர்கள் தப்பு செய்தார்களா என்று விசாரிக்க சொல்ல துப்பில்லை


Anand
ஜூலை 21, 2025 10:42

நீதிபதிகள் ஒன்றும் சூப்பர் நீதிபதிகள் அல்ல என்று யாராவது திருப்பி கேள்வி கேட்டால் நாம் முகத்தை எங்கு கொண்டு வைப்போம்? ஏற்கனவே ஒரு நீதிபதியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயம் நாறிப்போய் உள்ளது.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை