உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தே.ஜ., கூட்டணியில் சேர யாரும் பேசவில்லை

 தே.ஜ., கூட்டணியில் சேர யாரும் பேசவில்லை

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை விட, செங்கோட்டையன் எல்லா விதத்திலும் அனுபவம் வாய்ந்தவர். துரோகமும், பொய்யையும் தவிர வேறு எதுவும் தெரியாதவர் பழனிசாமி.அவருக்கு பாடம் புகட்ட, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தயாராகி விட்டார். ஜெயலலிதா படத்தை, சட்டைப்பையில் செங்கோட்டையன் வைத்திருப்பது, அவரது உண்மையான மனநிலையை காட்டுகிறது. என்னிடம் நட்பு ரீதியாக, பா.ஜ.,வில் இருந்து பேசுகின்றனரே தவிர, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதற்கு என்னிடம் யாரும் பேசவில்லை. அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை தந்த தி.மு.க.,வினர் இதுவரை நிறைவேற்றவில்லை. மாற்றுத்திறனாளிகள் கூட போராடும் சூழல் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் தேர்தலில், தி.மு.க., அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர். -- தினகரன் பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை