உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது எடுத்த நடவடிக்கை என்ன?: தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: கொடைக்கானலில் விதிமீறி கட்டடங்கள் கட்டப்பட்ட விவகாரத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.கொடைக்கானல் அருகில் உள்ள வில்பட்டி பஞ்சாயத்து பகுதியில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் பங்களா கட்டினர். அதற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என சர்ச்சை கிளம்பிய நிலையில், அதிகாரிகள் கட்டுமான பணியை நிறுத்தினர்.இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவைச் சேர்ந்த முகம்மது ஜூனைத் என்பவர் ‛ அனுமதியின்றி விதிகளை மீறி கட்டுமானங்கள் குறித்து முறையாக விசாரித்து, நடிகர்கள் பிரகாஷ்ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், ‛ பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா, திண்டுக்கல் கலெக்டர், கொடைக்கானல் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு' விசாரணையை ஒத்தி வைத்தனர்.தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இருவர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது' என விளக்கமளித்தார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், நடிகர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 9 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ramesh Sargam
ஜன 05, 2024 01:16

லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுப்பது. பிறகு இப்படி நீதிமன்றத்திடம் சிக்கிக்கொள்வது. லஞ்சம் வாங்காதீர்களென்று சொன்னால் கேட்டால்தானே...


sridharan RAMDAS
ஜன 05, 2024 01:07

உரிய நேரத்தில் அனுமதி வழங்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுப்போம் யுவர் ஹாநர்.


Sampath
ஜன 04, 2024 21:27

What action my lord?


வெகுளி
ஜன 04, 2024 18:36

ரெண்டு பேருக்கும் கலைமாமணி விருது குடுப்பது நடவடிக்கை எடுத்த கணக்கில் வருமான்னு விசாரிச்சுக்கிட்டு இருக்கோம் யுவர் ஆனர்...


rajasekaran
ஜன 04, 2024 18:08

ஐயா நீதிபதி அவர்களே நாங்கள் நடவடிக்கை எப்போதோ எடுத்து விட்டோம். அனால் என்ன நடவடிக்கை என்று தெரியல நீதிபதி அவர்களை.


ராஜா
ஜன 04, 2024 17:54

இருவரையும் அறிவாலயதுக்கு அடியாட்களாக சேர்தாகி விட்டது.


வாய்மையே வெல்லும்
ஜன 04, 2024 17:44

நடவடிக்கையா.. நடவடிக்கை கிலோ என்னவிலையில் விற்கிறது என கேட்டாலும் கேட்கும் தோழமை சுட்டல் விசயத்துக்கு விடியல் அரசு.. இவங்க எல்லாம் மறைமுக இந்டி கூட்டணி ஆளுங்க.. அவங்கமேல கேஸ் போடமுடியாது ..


M Ramachandran
ஜன 04, 2024 17:13

சப்போர்ட் செய்றவுக அவர்கள் மீது எதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்


அப்புசாமி
ஜன 04, 2024 16:57

கொடைக்கானலில் நிறைய கட்டிடங்கள் விதி மீறல்கள்


karupanasamy
ஜன 04, 2024 15:56

செல்பி எடுத்துக்கப்போறாராம் அவர்களே.


மேலும் செய்திகள்