உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: 13 மாவட்டங்களில் கொட்டபோகுது கனமழை

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: 13 மாவட்டங்களில் கொட்டபோகுது கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே 19) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (மே 19) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (மே 20)

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மே 21ம் தேதி

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் மே 21ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகளுக்கு வரும் மே 23ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

P. VENKATESH RAJA
மே 19, 2024 19:02

மதுரையில் அடமழை கொட்டி தீர்க்கிறது திருநெல்வேலியில் திணறடிக்கும் வகையில் மழை பெய்கிறது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை