உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் அகற்றம்

உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள் அகற்றம்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்கு, மேல்மா, மணிபுரம்,தேத்துறை, குரும்பூர், நர்மாபள்ளம், உள்ளிட்ட, 11 கிராமங்களில், 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதை கைவிட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 20 விவசாயிகளை கைது செய்தனர். அனைத்து தரப்பிலும் எழுந்த எதிர்ப்பால், அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, குண்டர் சட்டமும் திரும்ப பெறப்பட்டது.கடந்த, 16ல் சட்டசபையில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, 'மேல்மா சிப்காட் திட்டத்திற்கு அரசு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தவர்கள், விவசாயிகளே இல்லை; அவர்கள் பெயரில், ஒரு சென்ட் நிலம் கூட இல்லை' என கூறினார்.அந்த வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கக்கோரியும், அமைச்சர் பதவி விலக கோரியும், மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள், சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வலியுறுத்த, 20ல் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர்.இதனால், முதல்வரை சந்திக்க அனுமதிக்கும் வரை, தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி, மேல்மா கூட்ரோடு குறும்பூர் பகுதியில், ஒன்பது விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், பெருநகர் பெருமாள், குரும்பூர் கணேசன், ஆகியோர் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியளவில் மயக்கமடைந்தனர். அவர்களை மீட்ட போலீசார், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற, ஏழு பேரை நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு குண்டுகட்டாக வேனில் ஏற்றி சென்று, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை