உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிவினைவாதத்தை துாண்டுகிறார் முதல்வர்

பிரிவினைவாதத்தை துாண்டுகிறார் முதல்வர்

சென்னை:''தனித் தமிழ்நாடு, தனிக்கொடி வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். பிரிவினைவாதத்தை துாண்டுகிறார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:மாநிலங்களை பிரிக்க வேண்டும் என, பிரிவினைவாதத்தை முதல்வர் துாண்டுகிறார். இந்திய நாடு வல்லரசாக வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தனித் தமிழ்நாடு வேண்டும்; தனிக்கொடி வேண்டும் என, முதல்வர் நினைக்கிறார்.இந்தியா வல்லரசாக, அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். இந்திய நாடு நிர்வாக வசதிக்காக, பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, ஏதேனும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., நினைக்கிறது.இது மக்களுக்கு, நாட்டுக்கு விரோதமான செயல். மக்கள் இதை சிந்தித்து, வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும். பெண்களை அவதுாறாக, அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இது குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramaiyan Moorthy
ஏப் 16, 2025 09:37

இந்தியா ஒன்றாக இருப்பதுதான் மொத்த இந்தியர்களுக்கும் நல்லது. அதனை உறுதி செய்ய மைய அரசு பல்வேறு மொழி, நாகரிகம், கலாச்சாரம் கொண்ட மாநில மக்களை அவரவர் உரிமை, சுயமரியாதைக்கு பங்கமில்லாமல் நடத்த வேண்டும். குறைந்த பட்சம் கல்வி, மருத்துவம், நிதி ஆகிய மூன்று துறைகளிலும் மாநிலங்களின் முடிவை மைய அரசு ஏற்க வேண்டும். கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப் படவேண்டும். இந்திய நாட்டை இந்தி நாடாக மாற்றும் முயற்சி ஒன்று மட்டுமே தேச ஒற்றுமை குலைய வைக்கும் என்பதை உணர்ந்து மைய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பாட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை