சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட 12 துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை, கட்சியின் தலைவர்வாசனுக்கு வழங்கிதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tihzhn6p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கூட்டத்தில் பேசிய வாசன், ''த.மா.கா., நிறுவனர் மூப்பனாரின் வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், லோக்சபா தேர்தலில் த.மா.கா., முடிவெடுக்கும். தி.மு.க., -- காங்.,கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும்,'' என்றார்.பின்னர் வாசன் அளித்த பேட்டி:த.மா.கா., பொதுக்குழு எழும்பூரில் பிப்ரவரி 12ம் தேதி கூடுகிறது. அதில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். பா.ஜ., -அ.தி.மு.க., தலைவர்களை நான் சந்திப்பது புதிதல்ல. அடிக்கடிசந்திக்கிறேன். அப்படிதான் நட்டாவையும் பழனிசாமியையும் சந்தித்தேன். இவ்வாறு வாசன் கூறினார்.
உயிரூட்ட துாது போகிறாரா?
'இண்டியா கூட்டணி உடைந்துவிட்ட சூழலில், அ.தி.மு.க., -- பா.ஜ., -- பா.ம.க., - தே.மு.தி.க., -- ஓ.பி.எஸ்., -- தினகரன் -- புதிய தமிழகம் கூட்டணி அமைந்தால், தி.மு.க., கூட்டணியை வீழ்த்த முடியும் என, வாசன் நினைக்கிறார். இதற்காகவே நட்டாவையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சந்தித்தார். பிப்., 12க்குள் நல்லது நடக்கும் என நம்புகிறார்' என, வாசன்கட்சியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.