உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவியிடம் அத்துமீறல்; பாதிரியார் மீது வழக்கு

மாணவியிடம் அத்துமீறல்; பாதிரியார் மீது வழக்கு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை, ஏரி தெருவில் சர்ச் உள்ளது. இதை பாதிரியார் ரகுராஜ்குமார், 54, என்பவர் நிர்வகிக்கிறார். 10ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவி, வாரந்தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து செல்வது வழக்கம்.கடந்த, 2022 டிசம்பரில் வந்த அவரிடம், பாதிரியார் ரகுராஜ்குமார், பாலியல் சில்மிஷம் செய்தார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது. அந்த தகவலை மாணவி, சமீபத்தில் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் புகார்படி, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், பாதிரியார் ரகுராஜ்குமார் மீது நேற்று முன்தினம் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி