உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக முக்கியம்: ஜப்பானில் ஜெய்சங்கர் பேச்சு

மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக முக்கியம்: ஜப்பானில் ஜெய்சங்கர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: 'மகாத்மா காந்தியின் சாதனைகள் மிக நீண்ட காலம் கடந்துவிட்டன. தற்போது அவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.ஜப்பான் எடோகாவாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்த. பின்னர் ஜெய்சங்கர் பேசியதாவது: இயற்கையோடு இயைந்து வாழ்வது எப்படி என்பதை வலியுறுத்தியவர் காந்தி. அமைதி மற்றும் அகிம்சை பற்றிய காந்தியின் சிந்தனைகள் பெரியது. இன்று உலக நாடுகள் பல மோதல்களை எதிர்கொண்டு வருகிறது. டோக்கியோவில் இந்திய சமூகத்தினர் வசித்து வரும் பகுதியில் உள்ள பூங்காவிற்கு விரைவில் 'காந்தி பூங்கா' என பெயரிடப்படும்.

தேச தந்தை

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ​​ஆசியாவின் பிற பகுதிகள் சுதந்திரமடைந்தன. இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்று நாம் கூறும்போது, ​​​​உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. காந்தியின் சாதனைகள் மிக நீண்ட காலம் கடந்துவிட்டன. காலப்போக்கில், தற்போது அவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவில் மக்கள் காந்தியை தேசத்தின் தந்தையாக நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, எடோகாவாவில் வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த புகைப்படங்களை எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் பகிர்ந்துள்ளார்.

சந்திப்பு

டோக்கியோவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டணி பிளிங்கனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 28, 2024 15:35

பின்ன ???? பெரும்பான்மையினரை நம்பவைத்து கழுத்தறுத்தது, மற்ற பிரிவினருக்கு விட்டுக்கொடுக்க வைத்தது ..... என்ன சாதாரண சாதனையா ???? வேற எந்த நாட்டில் நடக்கும் இது ????


அப்புசாமி
ஜூலை 28, 2024 15:26

உள்ளூரில் சுட்டுத் தள்ளியாச்சு.


ஆரூர் ரங்
ஜூலை 28, 2024 15:02

ஆமாங்க. வ உ சியின் 5000 ரூபாய்க்கு அவர் எழுதிய கணக்கு முக்கியம். காந்திக் கணக்கு.


Priyan Vadanad
ஜூலை 28, 2024 14:55

காந்திய கிடைக்கிற நேரத்திலெல்லாம் ஓட்டு ஓட்டுனு ஓட்டிட்டு இப்ப காந்திய வெச்சு ஓட்டலாம்னு முடிவெடுத்துட்டாங்க போல தெரியுது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை