உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / மொட்டை மாடியை அழகிய பூங்காவாக மாற்ற எளிய வழிகள்!

மொட்டை மாடியை அழகிய பூங்காவாக மாற்ற எளிய வழிகள்!

சொந்தமாக வீடு வாங்குவது என்றால் அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தோட்டமாக பராமரிக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால், நெரிசலான நகரங்களில் வீடு கட்ட இடம் கிடைப்பதே சவாலாக மாறியுள்ள நிலையில் தோட்டத்துடன் வீடு என்பது கனவாக மாறி வருகிறது.குறைந்த பரப்பளவு மனையை வாங்குவோர் அதில், தோட்டம் அமைக்க வேண்டும் என்றால் மொட்டை மாடி அல்லது பால்கனி பகுதிகளையே நம்பி உள்ளனர். இதில் எளிய முறையில் பயன்தரும் தாவரங்கள் வளர்க்க தோட்டக்கலைத்துறை பொது மக்களுக்கு மானிய விலையில் செடிகள், பொருட்கள், உரம் ஆகியவற்றை வழங்குகிறது.இவற்றை வாங்கி மாடி தோட்டம் அமைப்பதில் பெரும்பாலான மக்கள் ஆர்வமாக செயல்படுகின்றனர். இதன்படி, தோட்டக்கலைத்துறையிடம் இருந்து செடிகளை வாங்கி தனித்தனி பைகளில் வைத்து வளர்ப்பதை பரவலாக அனைவரும் பார்த்து இருப்போம்.மொட்டை மாடியில் தொட்டிகள் அமைத்தும், பைகள் வைத்தும் செடிகள் வளர்ப்பதை திட்டமிட்டு மேம்படுத்தினால், உங்கள் வீட்டிலேயே ஒரு பூங்கா உருவாகிவிடும். உங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னென்ன வகை செடிகளை வளர்ப்பது என்பதை தெளிவாக திட்டமிடுங்கள்.தொட்டிகள், பைகளை பயன்படுத்தி வளர்ப்பதற்கான செடிகள் தேர்வில், சில அடிப்படை வழிமுறைகளை கவனமாக பின்பற்றலாம். குறிப்பாக, செடிகள், கொடிகளை வகை வாரியாக வரிசைபடுத்தி தேர்வு செய்வதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.சற்று உயரமாக வளரும் செடிகள், புதர் போன்று பரந்து வளரும் செடிகள் ஆகியவற்றை தேர்வு செய்யலாம். இத்துடன் கொடி வகையில் காய் தரும் வகை, பூக்கள் தரும் வகை என பிரித்து தேவையான தாவரங்களை தேர்வு செய்யுங்கள்.இதில் மொட்டை மாடியில் ஒரு பகுதியை தோட்டமாக பிரித்து, அதில் மையப்பகுதியில் பெரிய செடிகளையும், ஓரங்களில் சிறிய செடிகளையும் வளர்க்கலாம். இரும்பு கம்பிகளை பயன்படுத்தி கொடிகள் படரும் இடவசதியை ஏற்படுத்தலாம்.இதற்கான பந்தலில், சிறிய வகை மூலிகை தாவரங்கள், பூச்செடிகளை தொங்கும் தொட்டிகள் அமைத்து வளர்க்கலாம். மரம், செடி, கொடி என்று, காய்கள், பூக்கள் வளர்ந்து செழிக்கும் நிலையில் உங்கள் வீட்டு மொட்டைமாடி ஒரு பூங்காவாக மாறிவிடும்.அதிகம் வேர் விடாத, அதே நேரத்தில் குறைந்த அளவு தண்ணீரில் வளரும் செடிகளை தேர்வு செய்து வளர்க்கலாம். காய், கனிகள் தருவதற்காக மட்டுமல்லாது வண்ண மலர்கள் தரும் செடி, கொடிகளையும் சேர்த்து வளர்க்க வேண்டும்.சோலார் மின்சார உற்பத்தி வசதியை ஏற்படுத்தி, இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் விளக்குகளை அமைக்கலாம். இவ்வாறு செய்தால் இரவு நேரங்களில் குறிப்பாக முழுநிலவு நாட்களில் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் பொழுதை கழிக்கும் சுகம் அலாதியானதாக இருக்கும் என்கின்றனர் தோட்டக்கலை துறை அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை