உள்ளூர் செய்திகள்

கயிலாய யாத்திரைக்கு...

கயிலாயத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற திருநாவுக்கரசரின் இந்த போற்றியை பாடுங்கள்.பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றிபூதப்படை ஆள் புனிதா போற்றிநிறை உடைய நெஞ்சின் இடையாய் போற்றிநீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றிமறை உடைய வேதம் விரித்தாய் போற்றிவானோர் வணங்கப்படுவாய் போற்றிகறை உடைய கண்டம் உடையாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிமுன்பு ஆகி நின்ற முதலே போற்றிமூவாத மேனி முக்கண்ணா போற்றிஅன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றிஆறு ஏறு சென்னிச் சடையாய் போற்றிஎன்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றிஎன் சிந்தை நீங்கா இறைவா போற்றிகண் பாவி நின்ற கனலே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிமாலை எழுந்த மதியே போற்றிமன்னி என் சிந்தை இருந்தாய் போற்றிமேலை வினைகள் அறுப்பாய் போற்றிமேல் ஆடு திங்கள் முடியாய் போற்றிஆலைக் கரும்பின் தெளிவே போற்றிஅடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய் போற்றிகாலை முளைத்த கதிரே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிஉடலின் வினைகள் அறுப்பாய் போற்றிஒள் எரி வீசும் பிரானே போற்றிபடரும் சடைமேல் மதியாய் போற்றிபல்கணக் கூத்தப்பிரானே போற்றிசுடரில் திகழ்கின்ற சோதீ போற்றிதோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றிகடலில் ஒளி ஆய முத்தே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிமை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றிமாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றிபொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றிபோகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றிமெய் சேரப் பால்வெண்நீறு ஆடீ போற்றிமிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றிகை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிஆறு ஏறு சென்னி முடியாய் போற்றிஅடியார்கட்கு ஆர் அமுது ஆய் நின்றாய் போற்றிநீறு ஏறும் மேனி உடையாய் போற்றிநீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றிகூறு ஏறும் அம் கை மழுவா போற்றிகொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றிகாறு ஏறு கண்டம்-மிடற்றாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிஅண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றிஆதிபுராணனாய் நின்றாய் போற்றிபண்டை வினைகள் அறுப்பாய் போற்றிபாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றிதொண்டர் பரவும் இடத்தாய் போற்றிதொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றிகண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிபெருகி அலைக்கின்ற ஆறே போற்றிபேரா நோய் பேர விடுப்பாய் போற்றிஉருகி நினைவார் தம் உள்ளாய் போற்றிஊனம் தவிர்க்கும் பிரானே போற்றிஅருகி மிளிர்கின்ற பொன்னே போற்றிஆரும் இகழப்படாதாய் போற்றிகருகிப் பொழிந்து ஓடும் நீரே போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிசெய்ய மலர் மேலான் கண்ணன் போற்றித்தேடி உணராமை நின்றாய் போற்றிபொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றிபொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றிமெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றிமிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றிகை ஆனை மெய்த்தோல் உரித்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றிமேல் வைத்த வானோர் பெருமான் போற்றிமேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றிசீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிசிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றிகோலத்தால் குறைவு இல்லான் தன்னை அன்றுகொடிது ஆகக் காய்ந்த குழகா போற்றிகாலத்தால் காலனையும் காய்ந்தாய் போற்றிகயிலை மலையானே போற்றி போற்றி