சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : செப் 20, 2024 | ADDED : செப் 20, 2024
* மகாவிஷ்ணு எடுக்க இருக்கும் பத்தாவது அவதாரம் கல்கி. * வைகுண்டத்தின் காவலர்களாக இருப்பவர்கள் ஜெயன், விஜயன். * ஸ்ரீராமபிரானால் சாப விமோசனம் பெற்ற ரிஷியின் மனைவி அகல்யை. * எட்டெழுத்து மந்திர வடிவமான அஷ்டாங்க விமானத்தின் கீழ் மதுரை கூடலழகர் வீற்றிருக்கிறார்.* 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்தால் மோட்சம் கிடைக்கும். * ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, கண்டகச்சனியால் கஷ்டப்படுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட வேண்டும். * கிருஷ்ணரின் ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்கினார் பீஷ்மர். இதையே 'விஷ்ணு சகஸ்ரநாமம்' என்பர்.