உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* சியாமளா தண்டகம் என்னும் பாடலை பாடியவர் மகாகவி காளிதாசர். இவருக்கு கவி பாடும் சக்தியைக் கொடுத்தவள் உஜ்ஜயினி காளி. * நவராத்திரியின் போது மூன்று தேவியரான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி நம் வீடுகளில் எழுந்தருள்கின்றனர். * வள்ளலாருக்கு அவரது அண்ணியின் வடிவில் வந்து உணவளித்தவள் திருவொற்றியூர் வடிவுடையம்மன். * நமக்கு தேவையானதை தந்தையிடம் கேட்கும் முன் தாயிடம் கேட்போம் அல்லவா... அது போல் நவராத்திரியில் நம் கோரிக்கைகளை அம்பிகையிடம் வேண்டுவது சிறப்பு. * மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகையை போற்றும் பாடல் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம். * சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை 'ராஜமாதங்கி சியாமளா பீடம்' என அழைக்கிறோம். * மும்பையில் உள்ள 'மும்பாதேவியே' அந்த ஊருக்கு பெயர் வரக் காரணமானவள். * நவராத்திரியின் போது அம்மன் கோயிலில் விளக்கேற்றினால் புண்ணியம் கிடைக்கும். * மகிமை நிறைந்தவள் என்பதால் அம்பிகைக்கு மகமாயி எனப் பெயர் வந்தது. * நவராத்திரியின் போது கோயில்களில் மகாசண்டி ஹோமம் நடக்கும்.