உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* சரஸ்வதியின் மற்றொரு பெயர் பிராஹ்மி. இதற்கு பிரம்மாவின் மனைவி என பொருள் உண்டு. * தமிழ் இலக்கியமான சீவக சிந்தாமணியில் 'நாமகள் இலம்பகம்' என்ற பகுதி சரஸ்வதியைப் போற்றுகிறது. * திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனுாரில் சரஸ்வதி கோயில் கொண்டிருக்கிறாள். * நவநதிகளில் நான்காவதாக அமைந்த புனித நதி சரஸ்வதி. * நிறங்களில் வெள்ளையே சரஸ்வதிக்கு பிடித்த நிறம். * குமரகுருபரரால் பாடப்பட்டது சகலகலாவல்லி மாலை. இந்நுாலை தினமும் பாராயணம் செய்தால் சகல கலைகளில் சிறந்து விளங்கலாம். * வாகீஸ்வரி என்று சரஸ்வதியை அழைப்பர். இதன் பொருள் சொல்லுக்கு தலைவி. * கவிகாளிதாசர் வழிபட்ட சங்கீத தேவதை ராஜமாதங்கி. இவள் வீணை இசைக்கும் அம்பிகை* அன்னப்பறவை மீது சரஸ்வதி வலம் வருவதாக வேதங்கள் போற்றுகின்றன.* வேலுார் மாவட்டம் தோட்டபாளையம் தாரகேஸ்வரர் கோயிலில் பிரம்மாவிற்கு எதிரிலுள்ள சன்னதியில் சரஸ்வதி அருள்புரிகிறாள். * ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் சரஸ்வதி தன் பெயரில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி சிவனை வழிபட்டாள்.