உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ வருமகளே உலகு எல்லாமும் என்றென்றும் வாழ வைக்கும் ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது தருமகளே தமியேன் தலை மீது நின் தாளை வையே. பொருள்: செல்வம் தருபவளே! பாற்கடலில் பிறந்தவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! உலகத்தை வாழ வைப்பவளே! திருமாலின் மார்பில் குடியிருப்பவளே! மனவலிமை தருபவளே! எளியவனான என் தலை மீது உன் திருவடியை வைத்து அருள்புரிவாயாக. குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய திருமகள் அந்தாதி பாடல்.