உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

தருணாமுக கமலம் கருணாரஸபூர பூரிதாபாங்கம்!ஸஞ்ஜீவன மானாஸே மஞ்சுல மஹிமான மஞ்ஜனா பாக்யம்!!பொருள்: அதிகாலை சூரியனுக்கு ஒப்பான ஒளிமிக்க முகம் கொண்டவரே! கடல் போல் கருணை நிறைந்த கண்களைக் கொண்டவரே! மருந்து மலையைக் கொண்டு வந்து போரில் இறந்த வானரர்களை பிழைக்க வைத்தவரே! புகழத்தக்க மகிமை உள்ளவரே! அஞ்சனாதேவி பெற்ற புண்ணிய புத்திரரான ஆஞ்சநேயரே! உம்மை தரிசிக்க விரும்புகிறேன்.