இது மிருகசீரிடத்தின் கதை
UPDATED : நவ 24, 2017 | ADDED : நவ 24, 2017
சிரகசன் என்னும் வேடனிடம், நரபலியாக தன்னை கொடுக்க ஆதிசங்கரர் வாக்கு அளித்திருந்தார். ஒருநாள் நள்ளிரவில் வேடன் வர, சங்கரரும் அவனுடன் புறப்பட்டார். அப்போது, வாக்கு தவறாமையால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரு மானின் கதையை கூறினார்.“காட்டில் ஆண்மான் ஒன்று வாழ்ந்தது. வேடனிடம் சிக்கிய அது, தன் மனைவியை பார்த்து விட்டு வரும் வரை காத்திருக்கும்படி கூறியது. வேடனும் அரை மனதோடு சம்மதிக்க மான் புறப்பட்டது. சிறிது நேரத்தில் ஆண்மான் திரும்ப, அதனுடன் பெண்மான், இரு குட்டிகளும் இருந்தன. அவை தங்களின் உயிரையும் ஏற்குமாறு வேண்டின. மான்களின் நேர்மை, அன்பு, வாக்கு தவறாமை கண்ட வேடன் நெகிழ்ந்தான். அங்கு தோன்றிய சிவன், மான்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கினார். அவை மிருகசீரிடம் என்னும் பெயரில் நட்சத்திரமாக வானில் மின்னுகின்றன.