மகிழ்ச்சியின் இருப்பிடம் மனது
UPDATED : ஜன 10, 2016 | ADDED : ஜன 10, 2016
* மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். அது அவன் மனதில் தான் இருக்கிறது.* உடலின் இயக்கத்திற்கு எல்லா உறுப்புகளும் அவசியமானது போல, சமுதாயம் இயங்குவதற்கு, எல்லா மனிதர்களும் அவசியமானவர்களே.* மூச்சுப் பயிற்சியால் சுவாசத்தை சீர்படுத்தி தியானத்தில் ஆழ்ந்தால் மனம் அடங்கும்.* எண்ணத்தில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்த மனமே வலிமை கொண்டதாகும்.* சூழ்நிலை எப்போதும் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்றதாக மட்டுமே அமைவதில்லை.-ரமணர்