எல்லாரையும் விரும்பு!
UPDATED : பிப் 10, 2014 | ADDED : பிப் 10, 2014
* எல்லாச் செயலையும் நாமே செய்கிறோம் என நினைப்பது அகந்தையின் அடையாளம்.* நாம் கடவுளின் ஒரு சிறு கருவி மட்டுமே. இதை உணர்ந்தால் கர்வம் மறையும்.* பிறர் கெட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் மீதும் விருப்பம் கொள்.* உலக விஷயங்களிலும், பிறரின் அந்தரங்க விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது.* நான் யார் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள். பதிலைத் தேடிச் செல். வழி உனக்கு புலப்படும்.* ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வீகத் தன்மையும், வலிமையும் குடி கொண்டிருக்கிறது.-ரமணர்