மகிழ்ச்சியின் இருப்பிடம்
UPDATED : அக் 21, 2015 | ADDED : அக் 21, 2015
* மகிழ்ச்சி மனதிற்கு உள்ளே இருப்பதே அன்றி, அதை வெளியில் எங்கு தேடினாலும் கிடைக்காது.* தனி மனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால், சமுதாயமே சீர்திருத்தம் பெற்று விடும்.* வாழ்வில் நடக்கும் எல்லா சம்பவத்திற்கும், மனிதனின் முன்வினைப் பயனே காரணம்.* காந்த ஊசி வடக்கு திசை நோக்கியே இருப்பது போல, மனம் எப்போதும் கடவுளின் திருவடியை சிந்திக்க வேண்டும்.* மவுனமே அருளின் மிக உயர்ந்த வடிவம். அதை விடச் சிறந்த உபதேசம் வேறில்லை.ரமணர்