உள்ளூர் செய்திகள்

உற்சாகமுடன் செயல்படு

* கடவுளிடம் நேரில் பேசுவதையே பிரார்த்தனை என்கிறோம். இதில் மனம் ஒன்றி ஈடுபட்டால் துன்பம் விலகும்.* எதிர்மறை எண்ணங்களை கடவுளிடம் அளித்து விட்டால், அவர் அதை நல்லதாக்க மாற்றிக் கொடுப்பார்.* உனக்கு எது வேண்டுமோ, அதை கடவுளிடம் கேட்டுப் பெறுவதில் தவறேதும் இல்லை.* 'எனக்கு எல்லாம் நீயே; உன்னையே எனக்கு கொடு' என்று கடவுளிடம் பக்தி செலுத்துவதே உயர்ந்தது.* எப்போதும் உற்சாகத்துடன் இரு. அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடு. இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்.சாய்பாபா