அன்பைத் தேர்ந்தெடுங்கள்
UPDATED : ஜன 21, 2016 | ADDED : ஜன 21, 2016
*கடவுளின் கருணையைப் பெற விரும்பினால் வாழ்வில் அன்பு வழியைத் தேர்ந்தெடுங்கள்.* அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.*மக்கள் பொருளாசையால் கடவுளை வழிபடுகிறார்கள். அவரின் அருளுக்காக மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.* உண்ணாமல் நோன்பு இருப்பதை விட, பசியால் வாடும் ஒருவருக்கு உணவு அளிப்பது சிறந்தது.*தண்ணீர் குளிர்ச்சியை அதன் இயல்பாக கொண்டிருப்பது போல மனிதனுக்கு அன்பே இயற்கையானது.-சாய்பாபா