உள்ளூர் செய்திகள்

விநாடி கூட வீணாக்காதே!

* உடல்நலமும், மனவலிமையும் கிடைக்க பெற்றவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்வதைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.* காலமே மிகவும் விலை உயர்ந்த பொருள். ஒரு விநாடியைக் கூட வீணடிக்காதீர். அது நம் வாழ்க்கையைப் பாதித்துவிடும்.* ஆன்மிகப்பணி, போதனை, பிரார்த்தனை இவற்றுக்கும் அப்பால் உழைப்பால் புதியதோர் உலகத்தை நம்மால் உருவாக்கி விட முடியும்.* பணம், பதவி, புகழ் எதுவும் நம்முடன் வருவது இல்லை. இவற்றை இறைவனிடம் அர்ப்பணியுங்கள்* ஆணவத்தால் செருக்குடன் திரிபவர்கள் வாழ்வு இனிப்பதில்லை. பாவ வாழ்வு நடத்துபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைப்பதில்லை.* தர்மத்தைப் பற்றி மணிக்கணக்காகப் பேச முடியும். ஆனால், அதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது மிகவும் கடினமானது.* வேதத்தை கரைத்துக் குடித்த பண்டிதன் என்று பேர் எடுக்கலாம். ஆனால், மனத் தூய்மை இல்லாவிட்டால் துளியும் நன்மை உண்டாகாது.- சாய்பாபா