கடமைக்கே முதலிடம்
UPDATED : ஜூன் 10, 2014 | ADDED : ஜூன் 10, 2014
* கடமை உணர்வும், தர்ம சிந்தனையும் மனிதனை கடவுளிடம் அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள். * உங்களைப் பழித்தவரிடமும் அன்பு காட்டுங்கள். அதுவே ஆன்மிக வழியில் நடப்பதன் அடையாளம். * பொறுப்பை ஏற்கும் முன் அதற்குரிய தகுதி, திறமையை மனிதன் வளர்த்துக் கொள்வது அவசியம்.* பதவி, பணம், திறமை, புகழ் என எத்தனை இருந்தாலும், கடவுளின் அருளே நமக்குத் துணை. * கடமைக்கு முதலிடம் கொடுத்து விட்டு, பிறகு உரிமையைப் பற்றிச் சிந்திப்பதே சரியானது. - சாய்பாபா