மனம் விட்டுப் பழகு
UPDATED : டிச 14, 2014 | ADDED : டிச 14, 2014
* உதட்டில் வெளிப்படுவது அல்ல பக்தி. உள்ளத்தில் இருந்து பொங்கி எழுவதாக அமைய வேண்டும். * தனித்து வாழ நினைக்காதே. மனம் விட்டு மற்றவர்களிடம் பழகு. ஒற்றுமையே உயர்வுக்கு வழிவகுக்கும். * பிறருக்குக் கொடுத்து மகிழக் கற்றுக்கொள். அதற்காகவே கடவுள் கைகளைக் கொடுத்திருக்கிறார். * சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அவனவன் எண்ணத்தைப் பொருத்ததே வாழ்வு. * பிரார்த்தனை என்பது மனிதனின் துன்பத்தைப் போக்கும் அருமருந்து என்றால் மிகையில்லை. - சாய்பாபா