உள்ளூர் செய்திகள்

சகிப்புத்தன்மை வேண்டும்

* பறவை உயரமாக பறந்தாலும், முடிவில் மரக்கிளையில் அமர்ந்து தான் ஓய்வெடுக்கும். அதுபோல, கற்றவர்கள் எவ்வளவு அறிவு பெற்றிருந்தாலும், இறைவனை வணங்கினால் தான் அமைதி பெற முடியும்.* தளராத நம்பிக்கை, தெய்வ சிந்தனை, சகிப்புத்தன்மை ஆகிய குணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வைப் புனிதமாக்குங்கள். * பிறருடைய கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் குறுக்கிடாமல் இருப்பதும் மேலான பண்பு. * குடும்பம் என்பது சமூகத்தின் சிறுபகுதி. அதை முதலில் ஒழுங்குபடுத்துங்கள். குடும்பத்தை சீராக்கி விட்டால், சமூகமும் சீராகி விடும். * தீயவர்களையும் நல்வழிப்படுத்தவே கடவுள் முயல்கிறார். அனுபவத்தால் கிடைக்கும் பாடத்தை ஏற்று, அவர்களும் மனம் திருந்த வேண்டும்.- சாய்பாபா